கோவில்பட்டியில் பல்வேறு சங்கத்தினரை சந்தித்து ஆதரவு திரட்டிய கடம்பூர் ராஜூ

கோவில்பட்டி, ஏப். 1: கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, 3 முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது 4வது முறையாக போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து நேற்று பல்வேறு சங்கத்தினரை நேரில் சென்று சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். கோவில்பட்டி வடக்கு திட்டங்குளத்தில் உள்ள தனியார் தினசரி சந்தை நிர்வாகிகள், இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். பின்னர் பத்ரகாளி அம்மன் கோயிலில் அதிமுக வெற்றி பெற வேண்டி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தரிசனம் செய்தார். தொடர்ந்து நாடார் சங்கத்தினர், தீப்பெட்டி உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் மருத்துவ சமுதாய முடி திருத்துவோர் தொழிலாளர் சங்கத்தினர் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூக்கு மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் ஆதரவு தெரிவித்தனர். கடம்பூர் ராஜூ நேரில் சென்றும் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

அப்போது அவர் பேசுகையில், எனக்கு முழு ஆதரவு தந்த மக்கள் நீங்கள். என்னுடைய அறிமுகம் உங்களுக்கு தேவையில்லை. கடந்த 15 ஆண்டுகளாக உங்களோடு ஒருவனாக தான் நான் பணியாற்றி கொண்டு இருக்கிறேன். மீண்டும் என்னுடைய பணி அப்படித்தான் இருக்கும் என்பதை இந்த நேரத்தில் கூறிக் கொள்கிறேன். தமிழகத்திலேயே நம்பர் ஒன் நகராட்சி கோவில்பட்டி நகராட்சி, சிறந்த நகராட்சி விருது பெற்றுள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் கோவில்பட்டி தனி மாவட்டம் உருவாக்கப்படும், என்றார். அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், வழக்கறிஞரணி செயலாளர் சங்கர் கணேஷ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், ஜெ. பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாத்துரை, முன்னாள் மாவட்ட பொருளாளர் வேல்முருகன் மற்றும் மார்க்கெட் வியாபாரிகள், சங்கத் தலைவர்கள் உடனிருந்தனர்.

Related Stories:

பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை பூந்தமல்லி தவெக வேட்பாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு சென்னை, ஏப் 1: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற திருமண விழாவில், பெண் நிர்வாகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அளித்த புகாரின்பேரில், பூந்தமல்லி தவெக வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளரான குட்டி (எ) பிரகாசம் (45) என்பவரை, பூந்தமல்லி (தனி) தொகுதி தவெக வேட்பாளராக, கட்சி தலைவர் விஜய், கடந்த 29ம் தேதி அறிவித்தார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி திருவள்ளூரில் நடைபெற்ற திருமணம் வரவேற்பு விழாவில், தவெக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற போது, திருவள்ளூர் அடுத்த திருவூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டனின் மனைவியும், தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகியுமான சங்கீதா (43) என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அருகில் இருந்த தவெக தெற்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய பூந்தமல்லி சட்டமன்ற (தனி) தொகுதி தவெக வேட்பாளருமான குட்டி (எ) பிரகாசம் என்பவர், பெண் நிர்வாகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும், தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் வா என வற்புறுத்தியும் உள்ளார். இதுகுறித்து சங்கீதா, தனது கணவர் மணிகண்டனிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியான அவர், குட்டி (எ) பிரகாசத்தின் மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது அவர், ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாகவும், எல்லாவற்றிற்கும் அனுசரித்தால் மட்டுமே கட்சியில் பயணிக்க முடியும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கீதா மற்றும் அவரது கணவர் மணிகண்டன் ஆகியோர், தவெக தலைமை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது, நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இதனால் சங்கீதா மணிகண்டன், போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தவெக வேட்பாளர் பட்டியலில் பூந்தமல்லி தொகுதியில் தவெக சார்பில் குட்டி (எ) பிரகாசம் போட்டியிட போவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்ததால், சங்கீதா அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா, நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார். அதன்பேரில் குட்டி (எ) பிரகாசம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.