காயல்பட்டினம் பள்ளியில் ஆண்டு விழா

ஆறுமுகநேரி, ஏப். 1: காயல்பட்டினம் எல்.கே.தொடக்கப்பள்ளியின் 98வது ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தாளாளர் எல்.கே.லெப்பை தம்பி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் தியாகராஜன் வரவேற்றார். குழந்தைகள் நல மருத்துவர் முகம்மது கிஷார், வட்டார கல்வி அலுவலர்கள் பாப்ஹாய்ஸ், மாணிக்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு, கல்வி மற்றும் கலைநிகழ்ச்சிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். இப்பள்ளியில் பயின்று தற்போது சுபைதா மேல்நிலைப்பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி பனிமலருக்கு பள்ளி துணைத் தலைவர் இலியாஸ் பரிசு வழங்கி கவுரவித்தார்.

மேலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை இப்பள்ளியில் கல்வி பயின்று ஒழுக்கத்திலும், படிப்பிலும் சிறந்து விளங்கும் மாணவர் வெனீஸ் குமார், மாணவி கயல்விழி ஆகியோருக்கு தலைமை ஆசிரியரின் சார்பில் தங்க நாணயம் பரிசை தாளாளர் எல்.கே.லெப்பை தம்பி வழங்கினார். நிகழ்ச்சியை ஆசிரியை ஜாபிரா பர்வின் தொகுத்து வழங்கினார். திருச்செந்தூர் வட்டார வளமைய சார்பில் ஆசிரியர் பயிற்றுநர்கள் நபில்புஹாரி மற்றும் ஜெகதீஸ் பெருமாள் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தொடர்ந்து மாணவர்களின் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Related Stories:

பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை பூந்தமல்லி தவெக வேட்பாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு சென்னை, ஏப் 1: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற திருமண விழாவில், பெண் நிர்வாகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அளித்த புகாரின்பேரில், பூந்தமல்லி தவெக வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளரான குட்டி (எ) பிரகாசம் (45) என்பவரை, பூந்தமல்லி (தனி) தொகுதி தவெக வேட்பாளராக, கட்சி தலைவர் விஜய், கடந்த 29ம் தேதி அறிவித்தார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி திருவள்ளூரில் நடைபெற்ற திருமணம் வரவேற்பு விழாவில், தவெக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற போது, திருவள்ளூர் அடுத்த திருவூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டனின் மனைவியும், தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகியுமான சங்கீதா (43) என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அருகில் இருந்த தவெக தெற்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய பூந்தமல்லி சட்டமன்ற (தனி) தொகுதி தவெக வேட்பாளருமான குட்டி (எ) பிரகாசம் என்பவர், பெண் நிர்வாகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும், தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் வா என வற்புறுத்தியும் உள்ளார். இதுகுறித்து சங்கீதா, தனது கணவர் மணிகண்டனிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியான அவர், குட்டி (எ) பிரகாசத்தின் மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது அவர், ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாகவும், எல்லாவற்றிற்கும் அனுசரித்தால் மட்டுமே கட்சியில் பயணிக்க முடியும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கீதா மற்றும் அவரது கணவர் மணிகண்டன் ஆகியோர், தவெக தலைமை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது, நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இதனால் சங்கீதா மணிகண்டன், போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தவெக வேட்பாளர் பட்டியலில் பூந்தமல்லி தொகுதியில் தவெக சார்பில் குட்டி (எ) பிரகாசம் போட்டியிட போவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்ததால், சங்கீதா அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா, நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார். அதன்பேரில் குட்டி (எ) பிரகாசம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.