சட்டமன்ற தேர்தல் பணிகள் ஆசிரியைகளை அந்தந்த தொகுதியில் நியமிக்க வேண்டும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

நாகர்கோவில், ஏப்.1: தமிழ்நாட்டில் வருகிற 23ம்தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், ஆசிரியைகளுக்கு தேர்தல் பணிகளில் அந்தந்த தொகுதிகளிலேயே பணியாற்றிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று குமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, அதன் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தேர்தலை எவ்வித புகாருக்கும் இடமின்றி நேர்மையாக நடத்துவதற்கு ஆசிரியர்கள் தயாராக உள்ளனர். எனினும் தேர்தல் பணியில் தொய்வின்றி பணியாற்றிட மருத்துவக் காரணங்களால் தேர்தல் பணியாற்ற இயலாத நிலையில் உள்ளவர்களுக்கும், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து இருப்பவர்களுக்கும், இன்னும் 6 மாதத்தில் ஓய்வு பெறுபவர்கள், மறு நியமனத்தில் பணி புரிகிறவர்கள் ஆகியோருக்கும் தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளித்திட வேண்டும்.

ஆசிரியைகளை அந்தந்த தொகுதிகளிலேயே தேர்தல் பணியாற்றிட ஆணை வழங்கிட வேண்டும். வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர் -1 ஆகியோருக்கு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மனம் ஒத்த மாறுதல் பணி ஆணை வழங்கிட வேண்டும். தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவினை உறுதி செய்திட தேர்தல் பணி புரிவோருக்கு தாமதமின்றி தபால் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று வழங்கிட வேண்டும். இவ்வாறு கூறி உள்ளனர். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பென்னட் ஜோஸ், நிர்வாகிகள் கண்ணன், ஸ்டீபன், வேலவன், சுமகாசன்,பிரதீஷ் குமார், டோமினிக் ராஜ், மூட்டா மகேஷ், எட்வின் பிரகாஷ், ஹெர்பட் ராஜாசிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை பூந்தமல்லி தவெக வேட்பாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு சென்னை, ஏப் 1: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற திருமண விழாவில், பெண் நிர்வாகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அளித்த புகாரின்பேரில், பூந்தமல்லி தவெக வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளரான குட்டி (எ) பிரகாசம் (45) என்பவரை, பூந்தமல்லி (தனி) தொகுதி தவெக வேட்பாளராக, கட்சி தலைவர் விஜய், கடந்த 29ம் தேதி அறிவித்தார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி திருவள்ளூரில் நடைபெற்ற திருமணம் வரவேற்பு விழாவில், தவெக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற போது, திருவள்ளூர் அடுத்த திருவூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டனின் மனைவியும், தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகியுமான சங்கீதா (43) என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அருகில் இருந்த தவெக தெற்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய பூந்தமல்லி சட்டமன்ற (தனி) தொகுதி தவெக வேட்பாளருமான குட்டி (எ) பிரகாசம் என்பவர், பெண் நிர்வாகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும், தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் வா என வற்புறுத்தியும் உள்ளார். இதுகுறித்து சங்கீதா, தனது கணவர் மணிகண்டனிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியான அவர், குட்டி (எ) பிரகாசத்தின் மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது அவர், ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாகவும், எல்லாவற்றிற்கும் அனுசரித்தால் மட்டுமே கட்சியில் பயணிக்க முடியும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கீதா மற்றும் அவரது கணவர் மணிகண்டன் ஆகியோர், தவெக தலைமை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது, நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இதனால் சங்கீதா மணிகண்டன், போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தவெக வேட்பாளர் பட்டியலில் பூந்தமல்லி தொகுதியில் தவெக சார்பில் குட்டி (எ) பிரகாசம் போட்டியிட போவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்ததால், சங்கீதா அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா, நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார். அதன்பேரில் குட்டி (எ) பிரகாசம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.