பங்குனி உத்திரத்தையொட்டி மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்

மயிலம், ஏப்.1: விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தையொட்டி தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடமும் பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 23ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலம் 20ம் பட்டம் பாலய சுவாமிகள் தலைமை தாங்கி கொடியேற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து முருகனுக்கு தினமும் பால், தயிர், நெய் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரம், சுவாமி ஊர்வலம் என நடைபெற்று வந்தது. இதன் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று அதிகாலை 5:45 மணி அளவில் நடைபெற்றது.

இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். தேர் காலை 7.10 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. தொடர்ந்து உற்சவருக்கு மகா தீபாராதனை செய்தனர். பின்னர் மூலவருக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடுகள் நடைபெற்றது.

தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தேர் திருவிழாவை காண தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த முருக பக்தர்கள் தீர்த்குளத்தில் நீராடி முடி காணிக்கை செலுத்தி, பன்னீர், பால், புஷ்ப காவடிகள் எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் பெண்கள், குழந்தைகள் என பலர் அங்கப்பிரதட்சணம் செய்தனர். சென்னை, புதுவை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories:

பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை பூந்தமல்லி தவெக வேட்பாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு சென்னை, ஏப் 1: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற திருமண விழாவில், பெண் நிர்வாகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அளித்த புகாரின்பேரில், பூந்தமல்லி தவெக வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளரான குட்டி (எ) பிரகாசம் (45) என்பவரை, பூந்தமல்லி (தனி) தொகுதி தவெக வேட்பாளராக, கட்சி தலைவர் விஜய், கடந்த 29ம் தேதி அறிவித்தார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி திருவள்ளூரில் நடைபெற்ற திருமணம் வரவேற்பு விழாவில், தவெக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற போது, திருவள்ளூர் அடுத்த திருவூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டனின் மனைவியும், தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகியுமான சங்கீதா (43) என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அருகில் இருந்த தவெக தெற்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய பூந்தமல்லி சட்டமன்ற (தனி) தொகுதி தவெக வேட்பாளருமான குட்டி (எ) பிரகாசம் என்பவர், பெண் நிர்வாகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும், தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் வா என வற்புறுத்தியும் உள்ளார். இதுகுறித்து சங்கீதா, தனது கணவர் மணிகண்டனிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியான அவர், குட்டி (எ) பிரகாசத்தின் மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது அவர், ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாகவும், எல்லாவற்றிற்கும் அனுசரித்தால் மட்டுமே கட்சியில் பயணிக்க முடியும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கீதா மற்றும் அவரது கணவர் மணிகண்டன் ஆகியோர், தவெக தலைமை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது, நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இதனால் சங்கீதா மணிகண்டன், போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தவெக வேட்பாளர் பட்டியலில் பூந்தமல்லி தொகுதியில் தவெக சார்பில் குட்டி (எ) பிரகாசம் போட்டியிட போவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்ததால், சங்கீதா அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா, நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார். அதன்பேரில் குட்டி (எ) பிரகாசம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.