×

மகாவீர் ஜெயந்தியையொட்டி வரும் 31ம் தேதி மதுக்கடைகள் மூடல்

கிருஷ்ணகிரி, மார்ச் 29: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தியையொட்டி வருகிற 31ம் தேதி அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும். இது குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மகாவீர் ஜெயந்தி தினமான வருகிற 31ம் தேதி காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களில் மதுபானங்கள் மற்றும் பீர் வகைகள் விற்பனை செய்வது, மதுபானங்கள் கொண்டு செல்வதும், தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளின் 1981ன் படி முடக்கம் செய்யப்படுகிறது. இந்த விதிமுறைகளை மீறி விற்பனை செய்தாலோ, கொண்டு சென்றாலோ, தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Mahavir Jayanti ,Krishnagiri ,Krishnagiri district ,District Collector ,Dinesh Kumar ,
× RELATED கோடை வெயில் தாக்கத்தால் உதிர்ந்து விழும் மாம்பிஞ்சுகள்