ஆர்.எஸ்.மங்கலம்/சாயல்குடி, பிப்.18: ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட பள்ளி சத்துணவு மையங்களில் பணியாற்றும் சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு பாரம்பரிய சமையல் போட்டி நடைபெற்றது.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சோழந்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையல் போட்டி நடைபெற்றது. இதற்கு யூனியன் தலைவர் ராதிகா தலைமை வகித்தார். பி.டி.ஓ ராஜா முன்னிலை வகித்தார். போட்டியில் சிறப்பான முறையில் சிக்கனமாகவும், நேர்த்தியாகவும் சமையல் செய்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியில் அப்பகுதியில் பணி செய்யும் ஏராளமான சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.