வடுவூரில் நடந்தது திருவாரூரில் மாவட்ட அதிமுக சார்பில் 133 ஜோடிகளுக்கு 22ம் தேதி திருமணம் முதல்வரிடம் அமைச்சர் அழைப்பிதழ் வழங்கினார்

திருவாரூர், பிப்.17: திருவாரூரில் மாவட்ட அதிமுக சார்பில் வரும் 22ம் தேதி நடைபெறும் 133 ஜோடி களுக்கான திருமணத்தையொட்டி அழைப்பிதழை முதல்வர் பழனிச்சாமியிடம் அமைச்சர் காமராஜ் வழங்கினார். திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் உணவுத்துறை அமைச்சருமான காமராஜ் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் கடந்த வாரம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று சென்னையில் முதல்வர் பழனிசாமியை அமைச்சர் காமராஜ் நேரில் சந்தித்து அவருக்கு பூங்கொத்து கொடுத்து தனது சிகிச்சைக்கு உதவியதற்கு நன்றி தெரிவித்தார். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளையொட்டி திருவாரூரில் மாவட்ட அதிமுக சார்பில் 133 ஜோடி மணமக்களுக்கு இலவச திருமணமானது வரும் 22ம் தேதி நடைபெறுவதையொட்டி மணமக்கள் அனைவருக்கும் தங்கத் தாலி, பட்டு வேட்டி சேலை மற்றும் திருமண சீர் வரிசைகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான அழைப்பிதழையும் முதல்வர் பழனிசாமியிடம் அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

Related Stories: