சென்னை: மணப்பாறை, பாபநாசம், வாணியம்பாடி, திருச்சி கிழக்கு ஆகிய 4 தொகுதிகளில் இரண்டை எங்களுக்கு வழங்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறோம் என திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி அளித்துள்ளார். இன்று மாலை அல்லது நாளைக்குள் எந்த தொகுதி என இறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
