பொகோட்டா: கொலம்பியாவில் ராணுவ சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 66 பேர் பலியாகினர். 57 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கொலம்பியா நாட்டின் புயர்டோ லெகுய்சாமோ நகரில் இருந்து நேற்று முன்தினம் 128 பேருடன் ராணுவ சரக்கு விமானம் புறப்பட்டது. விமானத்தில் ராணுவத்தை சேர்ந்த 115 பேர், விமானப் பணியாளர்கள் 11 பேர், தேசிய காவல்துறையைச் சேர்ந்த 2 பேர் பயணித்தனர்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து தீப்பிடித்தது. இதில் 66 பேர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ராணுவ வீரர்கள். பலர் காயமடைந்தனர். 57 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 4 பேரை காணவில்லை என ராணுவ தளபதி ஹியூகோ அலெஜான்ட்ரோ லோபஸ் பாரெட்டோ கூறி உள்ளார். விபத்து நடந்த புயர்டோ லெகுய்சாமோ நகரம் ஈக்வடார் மற்றும் பெரு நாடுகளின் எல்லையை ஒட்டியுள்ள அமேசான் மகாணமான புடுமாயோவில் உள்ளது. இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
