காவேரிப்பட்டணத்தில் வீடு புகுந்து 1.50 லட்சம் நகை, பணம் கொள்ளை

கிருஷ்ணகிரி, பிப்.17: காவேரிப்பட்டணம்  சண்முகசெட்டி தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரபாபு(72). இவர், கடந்த 13ம் தேதி  குடும்பத்தினரோடு பெங்களூரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு  சென்றுவிட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது, பூட்டு  உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உள்ளே  சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த 3 பவுன் நகை, 2.5 கிலோ  வெள்ளி என மொத்தம் ₹1.50 லட்சம் மதிப்பிலான நகைகளை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

இதில், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தடயவியல் நிபுணர்களை வரவழைத்து, அங்கு பதிவாகியிருந்த தடயங்களை பதிவு செய்தனர். மேலும், ஒரு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: