ஈரோடு, பிப்.17: பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் படித்த பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா, பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. விழாவிற்கு பெருந்துறை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்திஜெயராஜ் தலைமை தாங்கினார். சமூக நல மாவட்ட அலுவலர் பூங்கோதை முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சரும், பெருந்துறை எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் கலந்து கொண்டு, 202 பெண்களுக்கு தலா 1 பவுன் வீதம், 202 நபர்களுக்கு ரூ.77 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் தாலிக்கு தங்கம் வழங்கி சிறப்புரையாற்றினார்.