உடன்குடி,பிப்.16: குலசேகரன்பட்டினம் குத்துபுல் அமீர் மவுலானா சேரா முஸயார் செய்யது சிராஜூதீன் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரசித்தி பெற்ற இத்தர்காவில் ஆண்டுதோறும் 15நாட்கள் கந்தூரி விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த பிப்ரவரி 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மாலை 5மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் முக்கிய வீதிகள் வழியே பவனியாக கொண்டு வரப்பட்டது. இரவு 11மணிக்கு கொடியேற்றம், மஹ்ரிப் தொழுகைக்குப் பின் துஆ ஓதப்பட்டு தப்ரூக் வழங்கப்பட்டது. இதில் முத்தவல்லி ரஹ்மத்துல்லா இமாம், சென்னை சேப்பாக்கம் அதிமுக துணை செயலர் முகைதீன், திமுக மாவட்ட சிறுபான்மைநலபிரிவு துணை அமைப்பாளர் ஷேக்முகம்மது மற்றும் உடன்குடி, குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர்.