×

நீலகிரியில் பூத்துள்ள ஜெகரண்டா மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

 

ஊட்டி: நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், பல்வேறு சோலை மரங்களில் அவ்வப்போது மலர்கள் பூத்துக் குலுங்கும். இவைகள் பல வண்ணங்களில் பூக்கும் நிலையில், இவைகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலையோரங்களில் உள்ள பல்வேறு வகையான சோலை மரங்கள் பூக்கும். குறிப்பாக, நீல நிறத்தில் ஜெகரண்டா மலர்கள், சிவப்பு நிறத்தில் சேவல் கொண்டை மலர்கள் போன்றவைகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களின் நடுவே, உள்ள மரங்களில் நீல நிறத்தில் ஜெகரண்டா மலர்கள் பூத்துள்ளன. பொதுவாக இவைகள் மார்ச் மாதம் இறுதி வாரத்தில் பூத்துக் குலுங்கும். இம்முறை சற்று முன்னதாக பூத்துள்ளன. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பூத்துள்ள இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.

Tags : Jekaranda ,Nilgiri ,
× RELATED விளாத்திகுளம் மாணவி கொலை வழக்குக்...