×

வர்த்தக சங்கத்தினர், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 

திருவாரூர், மார்ச் 18: ஒன்றிய அரசு மற்றும் தென்னக ரயில்வேயை கண்டித்து திருவாரூரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அமரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 36 லட்சம் மதிப்பில் மேம்பாடு செய்யப்பட்டு மதுரையில் கடந்த 1ந் தேதி நடைபெற்ற விழாவில் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில் இந்த ரயில் நிலையம் வழியாக மீட்டர் கேஜ் பாதையில் கடந்த 1990ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையில் காரைக்குடியில் இருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று இயங்கி வந்தது.

Tags : Thiruvarur ,Union Government ,Southern Railways ,Madurai ,
× RELATED சட்டமன்ற தேர்தல் காரணமாக ஊட்டியில் மலர் கண்காட்சி தாமதம்