சாத்தூர், பிப். 11: சாத்தூர் படந்தால் சந்திப்பில் உள்ள உயர்கோபுர மின்விளக்குக்கு, டோல்கேட் நிர்வாகம் மின்கட்டணம் கட்டாததால், மின்வாரியம் மின் இணைப்பை துண்டித்துள்ளது. இதனால், படந்தால் சந்திப்பு மீண்டும் இருளில் மூழ்கியுள்ளது. சாத்தூர் படந்தால் சந்திப்பு தேசிய நெடுஞ்சாலையில் ஹைமாஸ் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹைமாஸ் மின்விளக்கு கடந்தாண்டு வரை சரியாக எரியவில்லை. இதை சீரமைக்கக்கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். இது தொடர்பாக, ஒரு கட்சியின் நகரச் செயலாளர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், மதுரை திட்ட இயக்குனர் நிதிமன்றத்தில் ஆஜராகி, புதிய உயர்மின்கோபுரத்தில் லைட் எரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்பின் கடந்த ஆறுமாதமாக ஹைமாஸ் விளக்கு எரிந்து வந்தது.