×

யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க திராவிட மாடல் அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நான் முதல்வன் திட்டம் மூலம் குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான பாராட்டு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; உலகிலேயே மிகவும் கடினமாக தேர்வு யு.பி.எஸ்.சி தேர்வுதான். தமிழ்நாட்டில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை குறைந்து வந்தது. அரசு எடுத்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க திராவிட மாடல் அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டது. நடப்பாண்டில் தேர்வு பெற்ற 60 பேரில் 56 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள். நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் அரசு எடுத்த முன்னெடுப்புகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்று கூறினார்.

Tags : U. ,Dravitha Model Government ,Principal ,M.O. K. Stalin ,Chennai ,Chief Minister ,Honours ,Passing the Citizenship Exam ,K. Stalin ,NADU ,UPSC ,
× RELATED 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள...