பெரம்பலூர், பிப்.11: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பா ளர்கள் கைதை கண்டித்து, பெரம்பலூரில் 3வது நாளாக ஜாக்டோ-ஜியோ கூட்ட மைப்பின் சார்பாகக் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய் வூதியத் திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராடி வரும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 20க்கும் மேற்பட்டோரை தமிழக அரசு கைதுசெய்த நடவடிக்கையை கண்டித்து நேற்று மாலை கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் பெரம்பலூ ர் மா வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராமர், கலியமூர்த்தி, இளங்கோவன் ஆகியோர் கூட்டாகத் தலைமை வசித்தனர்.