டெல்லி : மேற்குவங்கத்தில் தேர்தலுக்கு முன்பாக மீதமுள்ள 53 லட்சம் வாக்காளர்களை சேர்ப்பது குறித்து முடிவுசெய்க என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக மேற்குவங்கம் தொடர்பான மனுக்கள் மீது விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது. ஒவ்வொரு 10 லட்சம் மனுக்கள் மீது முடிவு எடுத்ததும் வாக்காளர் இறுதி துணை பட்டியலை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
