திண்டிவனம், பிப். 9: திண்டிவனம் அருகே சாலையோர மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக இறந்தனர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த தலவாய்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன்கள் குருநாதன்(54), சென்னை ரயில்வேயில் வேலை செய்து வந்தார். செந்தில்நாதன்(50), சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். செந்தில்நாதன் மனைவி இந்துமதி (40), சென்னை சேப்பாக்கத்தில் வேளாண் அலுவலராக இருந்து வந்தார். செந்தில்நாதன் மகன் முகில்(16), 11ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் சென்னை மேடவாக்கத்தில் தங்கி வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 4 பேரும், நேற்று முன்தினம் காரில் சென்றுள்ளனர். காரை செந்தில்நாதன் ஓட்டினார். திருமண நிகழ்ச்சி முடிந்து மீண்டும் சென்னைக்கு செல்வதற்காக நேற்று காலையில் ஒரே காரில் 4 பேர் சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.