திண்டிவனம், பிப். 9: திண்டிவனத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை கத்தியால் வெட்டி ரூ.22 ஆயிரத்தை முகமூடி ஆசாமிகள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்- மரக்காணம் சாலை அருகே, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையோரம் தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்கில் நேற்று முன்தினம் இரவு புதூரை சேர்ந்த சுரேஷ் (24), எறையானூரை சேர்ந்த செந்தில்(38) ஆகியோர் இரவு பணியில் இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் பைக்கில் மங்கி குல்லா அணிந்து வந்த 3 மர்ம நபர்கள் 500 ரூபாய்க்கு பெட்ரோல் போடும்படி கூறியுள்ளனர்.