- ஸ்டாலின்
- பாஜக
- அமைச்சர்
- கே. ஆர். பெரியாகரப்பன்
- காரைக்குடி
- கே.ஆர்
- சிவகங்கை மாவட்டம்
- பெரியகாரப்பன்
- மு. கே.
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கே. ஸ்டாலின்
- தமிழ்
- தமிழ்நாடு
- உச்சம்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி நிர்வாகத்தால் தமிழ்நாட்டை இந்திய துணைக்கண்டமே திரும்பிபார்க்கும் நிலையில் உள்ளது. அனைத்திலும் சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை வழிநடத்துகிறார். அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் அரசு நிர்வாகம் அதலபாதாளத்தில் கிடந்தது; பொருளாதாரம் வீழ்ந்து கிடந்தது. அதனை சரி செய்து, கொரோனா காலத்தில் மக்களை காப்பாற்றி, தற்போது பொருளாதார வளர்ச்சியில் உச்சத்தில் உள்ள மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிக் காட்டியவர் தான் நமது முதல்வர்.
இந்திய துணைக்கண்டத்தில் கல்வி, தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி 6 சதவீதம். ஆனால், தமிழ்நாட்டில் அது இரண்டு மடங்காக 11.19 சதவீதம் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. இத்தகைய பெருமைக்குரிய நிர்வாகத்தை நமது முதல்வர் தந்துள்ளார். ஆட்சி நிர்வாகம், இயக்கத்தை வழிநடத்துவதில் நம் முதல்வருக்கு நிகர் யாரும் இல்லை. பாஜக மதவாத அரசியலை புகுத்தி குளிர்காய நினைக்கிறது. அத்தகைய கொடுஞ்செயலுக்கு இந்திய துணைக்கண்டத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கும் ஆற்றல் மிக்க தலைவராக நமது முதல்வர் செயல்பட்டு வருகிறார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்தியா முழுவதும் அமைவதற்கு முன்னோடியாக தமிழ்நாட்டில் அமைத்துக் காட்டி தொடர் வெற்றியை பெற உள்ளவர் தான் நமது முதல்வர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எல்லோருக்குமான இந்த அரசு தொடர வேண்டும் என எல்லோரும் விரும்புகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
