கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த புதிய தமிழகம் கட்சி, அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் தேர்தல் வெற்றிக்கு அதிமுக நிர்வாகிகள் பாடுபடவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து விலகியது. ஆரம்பத்தில் ஆட்சியில் பங்கு தருபவர்களுடன் மட்டுமே கூட்டணி என்ற அந்த கட்சியை, பெரிய கட்சிகள் எதுவும் கண்டு கொள்ளாததால் அந்த நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்தது.
இருந்தாலும் பெரிய கட்சிகளிடம் இருந்து எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு இல்லாததால், எந்த கூட்டணியில் சேர்வது என தவித்து வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணியில் சேர்வது என்பது தொடர்பான அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள கிருஷ்ணசாமி இல்லத்தில் நடைபெற உள்ளது.
இதில், அக்கட்சியின் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலம் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில், கூட்டணி தொடர்பான அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
