சென்னை : சென்னையில் அதிநவீன உட்கட்டமைப்புடன் கட்டப்பட்ட நிதிநுட்ப கோபுரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நிதிநுட்ப கோபுரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நிதிநுட்ப நகரத்தில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. ரூ.249 கோடி செலவில் 2 அடித்தளங்கள், தரை மற்றும் 11 தளங்களுடன் 5.56 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.
