மேலூர் அருகே உழவர் உற்பத்தியாளர் குழு அலுவலகம் திறப்பு

மேலூர், பிப். 9:  மேலூர் அருகே மேலவளவில் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழு அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. வேளாண்மை இணை இயக்குநர் விவேகானந்தன் தலைமை வகித்து, திறந்து வைத்தார். தொடர்ந்து நேரடி நெல் விதைப்பு குறித்த செயல் விளக்கம், விஞ்ஞானிகள், விரிவாக்க அலுவலர்கள், விவசாயிகள் கலந்துரையாடல் நடைபெற்றது.இதில் வேளாண்மை துணை இயக்குநர்கள் (மாநில திட்டம்) அமுதன், சுப்புராஜ், தனலட்சுமி, நீர் மேலாண்மை துணை இயக்குநர் பிரபா, பொறியியல் துறை செயற்பொறியாளர் முரேஷ்குமார், விற்பனை குழு செயலாளர் மெர்சி ஜெயராணி, வேளாண்மை உதவி இயக்குநர் மதுரைசாமி, வளர்மதி, இபிசி மஹிந்தரா சொட்டு நீர் பாசனம் பிரேம்குமார், அரவிந்தன் மற்றும் கொட்டாம்பட்டி வட்டார உழவர் உற்பத்தியாளர் குழு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: