தஞ்சாவூர், பிப்.25: பாபநாசம் சட்டசபை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட அம்மாப்பேட்டை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன் தி.மு.க. தலைமை கழகத்தில் விருப்பமனு தாக்கல் செய்தார். அப்போது, பொதுக்குழு உறுப்பினர் மருதுநடராஜன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுப்ரமணியன், வெங்கட், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ராமநாதன், கணேசன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி பழனியப்பன், ஒப்பந்ததாரர் சண்.சரவணன் மற்றும் பலர் இருந்தனர்.
