யுபிஎஸ்சி தேர்வில் 1,312 பேர் ஆப்சென்ட்

மதுரை, பிப். 8: மத்திய அரசின் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிகளுக்கான போட்டித்தேர்வு நேற்று மதுரையில் நடந்தது. மதுரையில் மூன்று பிரிவாக நடந்த தேர்வு எஸ்.இ.வி மெட்ரிக்குலேசன் பள்ளி உட்பட 6 மையங்களில் நடந்தது. இத்தேர்வு எழுத 2,299 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதனை 987 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1,312 பேர் தேர்வு எழுத வரவில்லை.கலெக்டர் அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, துணை தாசில்தார் மீனாகுமாரி, சூர்யா ஆகியோர் தேர்வை கண்காணித்தனர்.

Related Stories: