நெல்லை, பிப். 8: ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் நெல்லையில் இன்று (8ம் தேதி) முதல் தொடர்ந்து 3 நாட்கள் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லை சந்திப்பில் உள்ள வருவாய்த்துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பால்ராஜ், பார்த்தசாரதி தலைமை வகித்தனர். மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர் பெரியதுரை முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் வேல்ராஜன் வரவேற்றார்.