நாகை, பிப். 5: கஜா புயலால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி வேதாரண்யத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நாகையில் சிறு மற்றும் குறுந்தொழில் சங்க கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு 35 சதவீத இழப்பீடு வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்தது. ஆனால் 2 ஆண்டுகளாகியும் இன்னும் இழப்பீடு வழங்கவில்லை. ஆனால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தானே புயலால் பாதித்த சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.