×

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல், பிப்.20: நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் இன்று (20ம்தேதி) காலை 11 மணிக்கு நடக்கிறது. நாமக்கல் கோட்டத்திற்கு நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கிலும், திருச்செங்கொடு கோட்டத்திற்கு திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கிலும் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத்திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Tags : Namakkal ,Thiruchengode ,Namakkal Panchayat Union ,
× RELATED 80 கட்டு வைக்கோலுடன் தீப்பிடித்து எரிந்த லாரி