×

அங்கன்வாடி ஊழியர்கள் மறியல் போராட்டம்

நாமக்கல், பிப்.19: நாமக்கல்லில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டிமாதேவி தலைமை வகித்தார். அங்கன்வாடி, சத்துணவு திட்டங்களில் உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இருப்பது போல், மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள் பஸ்ஸ்டாண்ட் பிரதான சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் 220 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags : Anganwadi ,Namakkal ,Tamil Nadu ,Anganwadi Workers and Helpers Association ,Pandimadevi ,
× RELATED 80 கட்டு வைக்கோலுடன் தீப்பிடித்து எரிந்த லாரி