திருமங்கலம், பிப்.5: திருமங்கலம் அருகேயுள்ள தூம்பக்குளத்தை சேர்ந்தவர் பகத்சிங்(28). விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இதே கிராமத்தை சேர்ந்த கார்த்திகை செல்வி(23). கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பகத்சிங்கிற்கு அவரது பெற்றோர் வீட்டில் பெண் பார்க்க துவங்கியுள்ளனர். இதுகுறித்து தனது காதலியிடம் பகத்சிங் கூறி புலம்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகைசெல்வி, பகத்சிங் பெற்றோரை சந்தித்து தங்களது காதலை கூறியுள்ளார். அதனை ஏற்கமறுத்த் அவர்கள் கார்த்திகை செல்வியை துரத்தியுள்ளனர். பெற்றோர் ஒப்புதல் இல்லாததால் பகத்சிங்கும் கார்த்திகைசெல்வியை மணம் செய்து கொள்ளமுடியாது என மறுத்துள்ளார்.