திருச்சி, பிப்.16: திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் குட்கா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் பிப்.14ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது குட்டிமலை ரோடு பகுதியில் குட்கா விற்ற எ.புதூர் அன்பிலார் நகரைச் சேர்ந்த அஷ்ரப்அலி (56) கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 கிராம் குட்காவை பறிமுதல் செய்து பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.
