திருமங்கலம், பிப்.4: தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் வீடுகட்டுவதற்கு அரசு சார்பில் குறைந்த விலையில் அம்மா சிமெண்ட் விற்பனை துவக்கப்பட்டது. தனியார் சிமெண்ட் ஒரு மூட்டை 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் போது, அம்மாசிமெண்ட் 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பசுமைவீடு திட்டம், பிரதமரின் வீடுதிட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு இந்த சிமெண்ட் பெருமளவிற்கு பயன்படுத்தப்பட்ட வந்தது.
இந்த நிலையில் தற்போது அம்மா சிமெண்ட் விலை சற்று கூட்டப்பட்டு ஒரு மூட்டை 216 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. 50 மூட்டைகளுக்கு 10 ஆயிரத்து 800 ரூபாய் டிடி எடுத்து குடோனில் கொடுத்தால் ஒரு வாரத்திற்குள் கேட்ட பயனாளிக்கு அம்மா சிமெண்ட் வழங்கப்பட்டு வந்தது.