விழுப்புரம், பிப். 4: விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.ஐ உட்பட 14 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி எஸ்.ஐ பிரகாஷ் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திலிருந்து வளவனூர் காவல் நிலையத்திற்கும், பிரபு விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் இருந்து கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கும். எஸ்.எஸ்.ஐ பிரீத்தியு மன்னன் வெள்ளிமேடுபெட் காவல் நிலையத்திலிருந்து ரோசணை காவல் நிலையத்திற்கும், சரவணன் வானூர் காவல் நிலையத்திலிருந்து கிளியனூர் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.