வாடிப்பட்டி, பிப். 11: பாலமேடு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சில்லி (எ) சின்னசாமி (81). இவர் அப்பகுதியில் விளையாடிய 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந் சிறுமி கூச்சலிட்டுள்ளார். இதைக்கேட்டு அருகில் இருந்தோர் வந்தபோது சின்னசாமி, தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்த சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசார் சின்னசாமியை கைது செய்தனர்.
