×

5 பேருக்கு ராஜஸ்தானி – தமிழ்சேவா விருதினை வழங்கி 10 லட்சம் காசோலைகள் வழங்கப்பட்டன

தமிழகத்​தின் சமூக, கலாச்​சா​ரம் மற்​றும் கட்​டமைப்பு வளர்ச்​சிக்கு தங்​களது தன்​னலமற்ற சேவை​யால் சிறந்த பங்​களிப்பை வழங்​கிய தனி​நபர்​கள், நிறு​வனங்​களை கவுர​வித்து ‘ராஜஸ்​தானி – தமிழ் சேவா’ விருதுகளை ராஜஸ்​தானி அசோசி​யேஷன் தமிழ்நாடு வழங்கி வரு​கிறது.

இந்த ஆண்​டுக்​கான விருதுக்கு தமிழ்நாடு டாக்​டர் எம்​ஜிஆர் மருத்​து​வப் பல்​கலைக்​கழக முன்​னாள் துணை வேந்​தர் சுதாசேஷய்​யன், மேற்கு மாம்​பலம் பொது சுகா​தார மையத் தலை​வர் சுவாமி நாதன் ஐசன்​ஹோவர், மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் தலைமை ஓது​வார் பி.சற்​குரு​நாதன், பயிர் அறக்​கட்​டளை தலை​வர் வி.ஆ​ரா​யி, வழக்​கறிஞர் கே.ஆர்​.​ராஜா ஆகியோர் தேர்வு செய்​யப்​பட்​டனர். விரு​தாளர்​களை ‘துக்​ளக்’ஆசிரியர் எஸ்​.குரு​மூர்த்​தி, ‘இந்​து’ என்​.ர​வி, பரத​நாட்​டியக் கலைஞர் பத்மா சுப்​பிரமணி​யம், அண்ணா பல்​கலை. முன்னாள் துணைவேந்​தர் பால​குரு​சாமி, பகவான் மகாவீர் அறக்​கட்​டளை நிறு​வனர் சுகல்​சந்த் ஜெயின் ஆகியோர் அடங்​கிய நடு​வர் குழு தேர்வு செய்​திருந்​தது.

இந்​நிலை​யில், விருது வழங்​கும் விழா சென்​னை​யில் நேற்று முன் தினம் நடை​பெற்​றது. இதில் உச்ச நீதி​மன்றநீதிபதி ஆர்​.ம​காதேவன் தலைமை வகித்​து, விரு​தாளர்​களுக்கு ‘ராஜஸ்​தானி – தமிழ் சேவா’விருதுகள், ரூ.2 லட்​சத்​துக்​கான காசோலைகளை வழங்கி கவுர​வித்​தார்.

இதன் பின்னர் அவர் விழா மேடையில் பேசியதாவது: ‘தன் மண் சார்ந்த மனிதர்களை கவுரவிப்பதே, பண்படுத்தப்பட்ட ஒரு சமுதாயத்தின் அடிப்படை தேவை. இந்த மண்ணின் உன்னதத்தை போற்றக்கூடிய விருதாளர்களை போற்றுகிறேன். ஒரு நாட்டின் வளம் அந்த நாட்டில் உள்ள கிராமங்களை வளப்படுத்துவ தன் வாயிலாகவே அமைகின்றன. பதவி பணம் அந்தஸ்து என அனைத்தும் வாழ்க்கையை உயர்த்தும், ஒரே நேரத்தில் அனைத்தும் உங்களை விட்டு விலகி போகும். அதனால் உங்கள் நிலைமை இதுதான் என்று உணர்ந்து தங்களின் செயல், வார்த்தை மற்றும் வாழ்வு இருக்க வேண்டும். விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்’ என பேசினார்.

Tags : RAJASTHANI ASSOCIATION TAMIL NADU ,RAJASTHANI ,TAMIL NADU ,
× RELATED தமிழகத்தில் பறவைக் காய்ச்சல்...