மதுரை : மதுரை மாவட்டம் கல்லாணை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கல்குவாரிகள் செயல்படத் தடை கோரிய வழக்கில் மதுரை ஆட்சியர், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சுற்றுச் சூழல் பொறியாளர் பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. விதிகளை மீறிய குவாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லாணை சுப்பிரமணியன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
