சென்னை: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி வழங்காமல் ஒன்றிய பாஜக அரசு ஓரவஞ்சனை காட்டுவதாக திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை நடத்துவதற்கோ ஆளும் பாஜக அரசுக்கு விருப்பமில்லை என திருமாவளவன் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளும் கட்சி எம்.பி.க்கள் அடாவடித்தனமாக நடந்துகொள்கின்றனர்.
