திங்கள்சந்தை, பிப்.3 : சீர்காழி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் நகை வியாபாரி வீட்டில் புகுந்த வட மாநில கொள்ளை கும்பல் தாய், மகனை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து நகைகளையும் கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்ட போலீசார் கொள்ளையன் ஒருவனை என்கவுன்டர் செய்ததோடு மேலும் 3 கொள்ளையர்களை கைது செய்து நகைகளை மீட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த ெகாள்ளை கும்பலுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பொதுமக்கள், இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர். குமரி மாவட்டம் இரணியல் அடுத்த காஞ்சிரவிளை பகுதியை சேர்ந்த நிர்மல் என்பவர் வெளியிட்டு இருந்த வீடியோ பதிவில், வெட்டு கத்தி கொண்டு தென்னை மட்டையை வெட்டி விட்டு, இதே போல் கொள்ளையர்களை துண்டு, துண்டாக வெட்ட வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதை செயல்படுத்த வேண்டும் என கூறி இருந்தார்.