சென்னை : ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கியை வட்டியுடன் செலுத்தாவிட்டால் சொத்துகள் ஏலம் விடப்படும் என்று தீபா, தீபக் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல் அளித்துள்ளது. ரூ.13 கோடி வரி பாக்கியை செலுத்த வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்துசெய்ய தீபா, தீபக் தொடர்ந்த வழக்கு பிப்ரவரி 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட உள்ளது.
