நாமக்கல், பிப்.2: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், தமிழக அரசின் உத்தரவை அடுத்து 10 மாதங்களுக்கு பின் நேற்று மீண்டும் துவங்கியது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், 10 மாதங்களுக்கு பிறகு நேற்று, கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 168 மனுக்கள் மக்கள் அளித்தனர். குறைதீர் கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள், அனைவரும் முககவசம் அணிந்து வந்திருந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில், பொதுமக்கள் கைகழுவ தனி குடிநீர் இணைப்பு குழாய், தானியங்கி கிருமிநாசினி தெளிப்பு எந்திரம் அனைத்தும் தற்போது காட்சி பொருளாக மாறிவிட்டது.