விழுப்புரம், பிப். 2: கள்ளக்குறிச்சி அருகே கட்சியில் எம்எல்ஏ சீட்டு கேட்க, மனைவியிடம் வரதட்சணை கொடுமை செய்ததால், மனவேதனையடைந்த அதிமுக பெண் நிர்வாகி தற்கொலை செய்துகொண்டார். இவ்வழக்கில், கணவருக்கு 7 ஆண்டு சிறைதண்டனை விதித்து, மகளிர் விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மூங்கில் பாடியை சேர்ந்தவர் சூரியமூர்த்தி(36). அதிமுக பிரமுகர். இவருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தவெளியை சேர்ந்த தனலட்சுமி(28) என்பவருக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனலட்சுமி அதிமுகவில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணை செயலாளராக இருந்து துள்ளார். இதனிடையே கடந்த 2011ம் ஆண்டில் தனது மனைவி மற்றும் தனது பெயரில் கட்சியில், எம்எல்ஏ சீட்டுக்காக பணம் கட்ட வேண்டும் என்று மனைவி தனலட்சுமியிடம் ரூ.20 லட்சம் வரதட்சணையாக பணம் கேட்டு மிரட்டியுள்ளார் சூரியமூர்த்தி. மாமியார் வீட்டில் சென்று இந்த பணத்தை வாங்கித் தருமாறு தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.