டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார். காலை 11 மணிக்கு ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில் குடியரசுத் தலைவரை நிர்மலா சீதாராமன் சந்தித்தார். நாடாளுமன்றத்தில் 9வது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இதில் தொழில் துறையினருக்கு வரி குறைப்பு, பொருளாதார வளர்ச்சிக்கான அறிவிப்புகள், ஊக்குவிப்பு திட்டங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் வர உள்ளதால், அந்த மாநிலங்கள் தொடர்பாக திட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, பொருளாதார ஆய்வறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்தார். கூட்டத் தொடர் ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், 2026-27ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 9வது பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு களை கருத்தில் கொண்டு கவனம் செலுத்த வேண்டும். பொருளாதார வளர்ச்சி வேகம் மந்தமடையாத வகையில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும். இதற்கேற்ப உள்கட்டமைப்பு முதலீட்டில் தொடர்ந்து முக்கியத்துவம் அளிப்பது அவசியம். உலக அளவிலான போட்டித்தன்மைக்கு ஏற்ப தொழில்துறைகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

 

Related Stories: