சிவகங்கை, ஜன.30: காளையார்கோவில் அருகே பாகனேரியில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ ஆகியோர் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் பிடிஆர்.முத்து தலைமை வகித்தார். இரு பிரிவாக நடத்தப்பட்ட இப்போட்டியில் பெரியமாடு பிரிவில் மதகுபட்டியை சேர்ந்த காளைகளும், சிறிய மாடு பிரிவில் நெற்புகப்பட்டியை சேர்ந்த காளைகளும் முதலிடம் பிடித்தன. முதல் மூன்று இடங்களை பிடித்த காளைகளுக்கும் மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. போட்டியை கீழக்கோட்டை சண்முகசுந்தரம், காளையார்கோவில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தொடங்கி வைத்தனர். சிவகங்கை நகர் செயலாளர் துரைஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், யோக.கிருஷ்ணகுமார்,