சேலம், ஜன.30: சேலம் மாநகரில் குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் உதவுகிறது என போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறினார். சேலம் மாநகர பகுதியில் போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து, பல்வேறு இடங்களில் குற்ற தடுப்பு நடவடிக்கைக்காக சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருகின்றனர். இந்த வகையில், சூரமங்கலம் பகுதியில் 102 சிசிடிவி கேமராக்களை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பொருத்தினர். இதனை பயன்பாட்டிற்கு திறக்கும் விழா, திருவாக்கவுண்டனூரில் நேற்று மாலை நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலைமை வகித்து, புதிதாக பொருத்தப்பட்ட 102 சிசிடிவி கேமராக்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். பின்னர் கமிஷனர் செந்தில்குமார் பேசுகையில், “சேலம் மாநகர பகுதியில் இதுவரை 17 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.