சென்னை: மதவாத அரசியல் செய்வோர்க்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4000 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: திமுக ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4000 கோயில் குடமுழுக்குகள். ஆயிரமாவது குடமுழுக்கு – மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயில் (2023). இரண்டாயிரமாவது குடமுழுக்கு – மயிலாடுதுறை – கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயில் (2024). மூன்றாயிரமாவது குடமுழுக்கு – நாகை – திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயில் (2025). நான்காயிரமாவது குடமுழுக்கு – இன்று, பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோயிலில். இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை. மதவாத அரசியல் செய்வோர்க்கு தமிழ்நாட்டில் இடமில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
