- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- சட்டமன்ற உறுப்பினர்
- மேற்கு மம்பலம்
- காசிவிஸ்வநாதர் கோயில்
- மயிலாடுதுறை
- தலபரசலூர்
- வீரதீஸ்வரர்
சென்னை: ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆயிரமாவது குடமுழுக்கு 2023ல் மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் நடைபெற்றது. 2 ஆயிரமாவது குடமுழுக்கு 2024ல் மயிலாடுதுறை கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயிலில் நடந்தது. 3 ஆயிரமாவது குடமுழுக்கு நாகை திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோயிலில் 2025ல் நடந்தது. 4 ஆயிரமாவது குடமுழுக்கு இன்று பெரம்பூர் சேமாத்தம்மன் கோயிலில் நடைபெற்றது. இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை. மத அரசியல் செய்வோருக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்றும் கூறினார்.
