சென்னை : ஜனநாயகன் படத்தை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதால் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தீர்ப்பில், “ஜனநாயகன் படத்தில் அந்நிய சக்திகள் நாட்டில் பிரச்சினை ஏற்படுத்துவது போல உள்ளதாக கூறப்பட்ட புகார் தீவிரமானது. மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பது போலும் காட்சிகள் ஜனநாயகன் படத்தில் இடம்பெற்றுள்ளது. மறு ஆய்வு தொடர்பான சென்சார் போர்டு முடிவுக்கு எதிராக கோரிக்கை வைக்காமல் பட நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு உகந்ததல்ல,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
