மரக்காணம், ஜன. 29: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கடந்த இரண்டு வாரத்துக்குமுன் சிலரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. இந்த அழைப்பை எடுத்தபோது மறுமுனையில் பேசிய நபர், உங்களது செல்போன் எண்ணுக்கு 2 கிராம் தங்கம் பரிசாக விழுந்துள்ளது என்று கூறி நீங்கள் பார்சல் செலவுக்கு ரூ.600 மட்டும் செலுத்தி உங்கள் பரிசான இரண்டு கிராம் தங்கத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி செல்போனை துண்டித்துள்ளார். ரூ.600 செலுத்தி அந்த பார்சலை பிரித்தபோது அதில் தங்க நிறத்தில் 4 வளையல்கள் இருந்துள்ளது. இது குறித்து மரக்காணம் மேலவீதியைச் சேர்ந்த சையத்ஹமீத் என்பவர் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.