தொண்டி, ஜன.29: தொண்டி அருகே இரண்டு இடங்களில் ரோட்டில் நின்ற லாரி மற்றும் டிராகடர் மீது டூவீலர்கள் மோதியதில் 2 பேர் பலியாகினர். தொண்டி அருகே பாண்டுகுடியை சேர்ந்தவர் முருகாணந்தம்(49). இவர் நேற்று முன்தினம் இரவு கடைவீதிக்கு சென்று விட்டு டூவீலரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது பாண்டுகுடி ரோட்டின் ஓரம் நிறுத்தி வைத்திருந்த டிராக்டரில் மோதியுள்ளார். பலத்த காயம் அடை ந்த அவரை திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே இறந்து விட்டார்.